கோவை: பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு, அவ்வப்போது நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை: பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு, அவ்வப்போது நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதேபோல், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 2 பேருக்கு, பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை செவிலியர் ஒருவருக்கும் நோய் தொற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மேலும், பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியை சேர்ந்த பூ வியாபாரி ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நோய் பரவலை கட்டுப்படுத்த, சுகாதாரத் துறையினர் கொரோனா தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி, குடியிருப்புகளை சுற்றிலும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதேபோல், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 2 பேருக்கு, பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை செவிலியர் ஒருவருக்கும் நோய் தொற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மேலும், பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியை சேர்ந்த பூ வியாபாரி ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நோய் பரவலை கட்டுப்படுத்த, சுகாதாரத் துறையினர் கொரோனா தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி, குடியிருப்புகளை சுற்றிலும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.