கோவை: கோவையில் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கை மற்றும் EIA சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டது.
கோவை: கோவையில் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கை மற்றும் EIA சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் புதிய கல்வி கொள்கை 2020 ஐ நடைமுறைப்படுத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, இச்சட்டத்திற்கான வரைவு மசோதா வந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது.
இதனால், சமூக நீதியை பறிப்பது மும்மொழி கொள்கையை திணிப்பது போன்ற உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் புதிய கல்வி கொள்கை 2020 ஐ திரும்பப் பெற வேண்டும். இந்த கொள்கையை அமல்படுத்துவது என்பது மாநிலங்களில் உரிமையை பறிப்பதாக உள்ளது.
ஏழை மக்களின் குழந்தைகளின் கல்வி கனவை நாசமாக்கிற, இக்கல்வி கொள்கையை அமல்படுத்தினால், அது தேசத்தை பின்னுக்கு இழுக்கும் செயலாக அமையும்.எனவே, கோவை மாவட்ட மக்கள் ஒன்றுபட்டு புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும். என்று கேட்டுக்கொள்கிறோம்.
கோவை மாவட்டத்தில் இயற்கை அரணான மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலை பாதிக்கும் EIA சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
மத்திய அரசு முன் வைத்துள்ள சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை (EIA Draft 2020) என்பது நாட்டின் இயற்கை வளங்களை பெரு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் குறித்து எந்தவித கவனமும் கொள்ளாமல், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபமே கவனத்தில் கொள்ளப்படுகிறது.
தொழில் துறையினருக்கு சலுகை என்பதன் பெயரால் இந்திய- அந்நிய பெரு முதலாளிகளின் பார்வை, இப்பரந்த தேசத்தின் பூமிக்கடியில் உள்ள கனிம வளங்களை சூறையாடுவதே ஆகும். அதற்கு ஆதரவான EIA 2020 ஐ முறியடிப்போம்.
இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக, கோவையின் இயற்கை அரணாகவும், குடிநீர் ஆதாரமாகவும், விளங்குகின்ற மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை சூழல் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.
எனவே, சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை (EIA Draft 2020) திரும்பப்பெற வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனால், சமூக நீதியை பறிப்பது மும்மொழி கொள்கையை திணிப்பது போன்ற உள்ளடக்கத்தை கொண்டிருக்கும் புதிய கல்வி கொள்கை 2020 ஐ திரும்பப் பெற வேண்டும். இந்த கொள்கையை அமல்படுத்துவது என்பது மாநிலங்களில் உரிமையை பறிப்பதாக உள்ளது.
ஏழை மக்களின் குழந்தைகளின் கல்வி கனவை நாசமாக்கிற, இக்கல்வி கொள்கையை அமல்படுத்தினால், அது தேசத்தை பின்னுக்கு இழுக்கும் செயலாக அமையும்.எனவே, கோவை மாவட்ட மக்கள் ஒன்றுபட்டு புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும். என்று கேட்டுக்கொள்கிறோம்.
கோவை மாவட்டத்தில் இயற்கை அரணான மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலை பாதிக்கும் EIA சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
மத்திய அரசு முன் வைத்துள்ள சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை (EIA Draft 2020) என்பது நாட்டின் இயற்கை வளங்களை பெரு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் குறித்து எந்தவித கவனமும் கொள்ளாமல், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபமே கவனத்தில் கொள்ளப்படுகிறது.
தொழில் துறையினருக்கு சலுகை என்பதன் பெயரால் இந்திய- அந்நிய பெரு முதலாளிகளின் பார்வை, இப்பரந்த தேசத்தின் பூமிக்கடியில் உள்ள கனிம வளங்களை சூறையாடுவதே ஆகும். அதற்கு ஆதரவான EIA 2020 ஐ முறியடிப்போம்.
இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக, கோவையின் இயற்கை அரணாகவும், குடிநீர் ஆதாரமாகவும், விளங்குகின்ற மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை சூழல் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.
எனவே, சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை (EIA Draft 2020) திரும்பப்பெற வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.