திருப்பூர்: உற்பத்தி செய்யப்பட்டு தேக்கத்தில் உள்ள ரூ.16 கோடி மதிப்புள்ள கைத்தறி ஜவுளி ரகங்களை கோ-ஆப்டெக்ஸ் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோவை-திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை வைத்துள்ளது.
திருப்பூர்: உற்பத்தி செய்யப்பட்டு தேக்கத்தில் உள்ள ரூ.16 கோடி மதிப்புள்ள கைத்தறி ஜவுளி ரகங்களை கோ-ஆப்டெக்ஸ் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோவை-திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை வைத்துள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் பிச்சம்பாளையத்தில் உள்ள தந்தை பெரியார் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மென்பட்டு, நெகமம் காட்டன், கோரா காட்டன் சேலைகள் உள்ளிட்ட கைத்தறி ஜவுளி ரகங்களை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்யவில்லை. இதனால் திருப்பூர், கோவை ஆகிய இரு மாவட்டங்களிலும் ரூ.16 கோடி மதிப்புள்ள கைத்தறி ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளன.
இதன் காரணமாக கைத்தறி சங்கங்கள் நலிவடைந்து வருவதுடன், சுமார் 70 ஆயிரம் நெசவாளர் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை தள்ளுபடி மானிய தொகையை அரசு வழங்கி வருகிறது. இதை தமிழகம் முழுவதும் ஒரே தவணையாக ரூ.165 கோடியை வழங்கினால் சுமார் 70 ஆயிரம் நெசவாளர் குடும்பங்கள் தொடர் வேலை வாய்ப்பு பெற்று நன்மையடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், கொரோனா ஊரடங்கு காலத்தில் மோசமான வியாபாரம் காரணமாக நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதால் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக பெற்றுள்ள கடன் தொகைக்கான வட்டியை செப்டம்பர் மாதம் வரை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் பிச்சம்பாளையத்தில் உள்ள தந்தை பெரியார் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மென்பட்டு, நெகமம் காட்டன், கோரா காட்டன் சேலைகள் உள்ளிட்ட கைத்தறி ஜவுளி ரகங்களை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்யவில்லை. இதனால் திருப்பூர், கோவை ஆகிய இரு மாவட்டங்களிலும் ரூ.16 கோடி மதிப்புள்ள கைத்தறி ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளன.
இதன் காரணமாக கைத்தறி சங்கங்கள் நலிவடைந்து வருவதுடன், சுமார் 70 ஆயிரம் நெசவாளர் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை தள்ளுபடி மானிய தொகையை அரசு வழங்கி வருகிறது. இதை தமிழகம் முழுவதும் ஒரே தவணையாக ரூ.165 கோடியை வழங்கினால் சுமார் 70 ஆயிரம் நெசவாளர் குடும்பங்கள் தொடர் வேலை வாய்ப்பு பெற்று நன்மையடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், கொரோனா ஊரடங்கு காலத்தில் மோசமான வியாபாரம் காரணமாக நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதால் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக பெற்றுள்ள கடன் தொகைக்கான வட்டியை செப்டம்பர் மாதம் வரை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.