பவானியில் வெள்ளப்பெருக்கு: லிங்காபுரம் பாலம் மூழ்கியது; தீவில் வாழ்வது போல் உள்ளது, என பாதிக்கபட்ட மக்கள் கவலை

கோவை: பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து வருவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் லிங்காபுரம் உயர்மட்ட பாலம் மூழ்கியது.

கோவை: பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து வருவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் லிங்காபுரம் உயர்மட்ட பாலம் மூழ்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையானது கடந்த ஒருவார காலமாக பெய்து வரும் பருவமழையால் நிரம்பி நான்காவது நாளாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

10,000 கன அடி முதல் 32,000 கன அடிவரை தண்ணீர் உபரியாக பவானி ஆற்றில் திறக்கபட்டு வருவதால், பவானி அணையின் நீர் மட்டமும் மளமளவென உயர்ந்து தற்போது 95 அடியை எட்டியுள்ளது.



இதனால், அணை பகுதி அருகே உள்ள காந்தவயல், லிங்காபுரம் பகுதியினை இணைக்கும் பாலம் தற்போது தண்ணீரில் மூழ்கியுள்ளது. 30 அடி உயரம் கொண்ட அந்த பாலம் முழுவதும் மூடபட்டு அதற்கும் மேல் தண்ணீரானது தேங்கி வருவதால் அங்குள்ள கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமடைந்துள்ளனர்.

காந்தவயல், ஆளூர், உளியூர் கிராமங்களை லிங்காபுரம் பகுதியுடன் இணைக்கும் இந்த பாலம் தற்போது நான்கு புறங்களும் தண்ணீரால் சூழபட்டுள்ளது.



அத்தியாவசிய பொருட்களை கூட எடுத்து செல்ல முடியாத சூழலுக்கு தள்ளபட்டுள்ள இந்த கிராம மக்கள் ஒவ்வொரு பருவமழையின் போதும் தீவில் வாழ்வது போல உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

5000 ஆயிரம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் இந்த பகுதியில் விவசாய விளைப்பொருட்களையும் எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளதால் விரைந்து அரசு பாலம் கட்டிதர உரிய நடவடிக்கை எடுக்க வேணடும் என கோரிக்கை விடுத்துள்ளனர் அப்பகுதி கிராம மக்கள்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...