அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா..! கோவையில் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு!

கோவை: அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்ற நிலையில், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை: அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்ற நிலையில், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றதையொட்டி கோவை மாவட்ட காவல் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

வரலாற்று சிறப்புமிக்க அயோத்தியில் இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல குறிப்பிட்ட பதட்டமான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் கோவை மேட்டுப்பாளையத்தில் காவல்துறையின் சார்பில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது ஊட்டி சாலையில் உள்ள சோதனை சாவடிக்கு சென்று இ-பாஸ் மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பொதுமக்களை பார்வையிட்டார். மேலும் போலியான இ-பாஸை எப்படி கண்டுபிடிப்பது என்று பணியிலிருந்த காவலர்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தார்.

மேலும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் பேரிடர் மேலாண்மை குழுவுடன் இணைந்து ஆய்வு செய்து கரையோர பகுதி மக்களின் பாதுகாப்பு குறித்தும் காவல்துறை எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதேபோல, மேட்டுப்பாளையம் நகரின் முக்கிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பாளர் நகரின் முக்கிய பகுதிகளில் செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை கண்டறிந்து உடனடியாக பழுது நீக்க உத்தரவிட்டார். மேலும் வியாபாரிகள், தன்னார்வலர்கள் அனைவரும் காவல்துறையினருடன் உடன் இணைந்து குற்ற நடவடிக்கைகளை கண்டுபிடிக்க சிசிடிவி கேமராக்களை பொருத்த முன்வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் காவல் நிலையத்தில் கிடப்பில் இருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்கவும் காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் அவர்களின் தன்மையறிந்து அணுகவேண்டும் எனவும் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் காவல் நிலையத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுரைகள் வழங்கினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...