பல்லடம் சாலையில் பராமரிப்பில்லாத செல்போன் டவர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் உயிரிழப்பு!

திருப்பூர்: திருப்பூர் பல்லடம் சாலையில் பராமரிப்பில்லாத செல்போன் டவர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் பல்லடம் சாலையில் பராமரிப்பில்லாத செல்போன் டவர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலை தமிழ்நாடு திரையரங்கம் அருகே பராமரிப்பின்றி இருந்த செல்போன் டவர் சேதமடைந்து பல்லடம் சாலையில் சரிந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செங்கிஸ்கான்(54) என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது செல்போன் கோபுரம் சரிந்ததில் காரும் சேதம் அடைந்தது. இந்த விபத்து காரணமாக திருப்பூர் பல்லடம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த வீரபாண்டி போலீசார், செங்கிஸ்கான் உடலைக் கைப்பற்றி சரிந்து விழுந்த செல்போன் டவரை அப்புறப்படுத்தினர் இதன் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக இரவு நேரத்தில் செல்போன் கோபுரம் ஒன்று முறிந்து விழுந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக சாலையில் போக்குவரத்து இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருப்பூரில் செல்போன் டவர்கள் பராமரிப்பின்றி முறிந்து விழுவது தொடர்கதையாகி வருவதால் செல்போன் டவர்களை உடனடியாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...