பல்லடம் சாலையில் பராமரிப்பில்லாத செல்போன் டவர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் உயிரிழப்பு!

திருப்பூர்: திருப்பூர் பல்லடம் சாலையில் பராமரிப்பில்லாத செல்போன் டவர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் பல்லடம் சாலையில் பராமரிப்பில்லாத செல்போன் டவர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலை தமிழ்நாடு திரையரங்கம் அருகே பராமரிப்பின்றி இருந்த செல்போன் டவர் சேதமடைந்து பல்லடம் சாலையில் சரிந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செங்கிஸ்கான்(54) என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது செல்போன் கோபுரம் சரிந்ததில் காரும் சேதம் அடைந்தது. இந்த விபத்து காரணமாக திருப்பூர் பல்லடம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த வீரபாண்டி போலீசார், செங்கிஸ்கான் உடலைக் கைப்பற்றி சரிந்து விழுந்த செல்போன் டவரை அப்புறப்படுத்தினர் இதன் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக இரவு நேரத்தில் செல்போன் கோபுரம் ஒன்று முறிந்து விழுந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக சாலையில் போக்குவரத்து இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருப்பூரில் செல்போன் டவர்கள் பராமரிப்பின்றி முறிந்து விழுவது தொடர்கதையாகி வருவதால் செல்போன் டவர்களை உடனடியாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...