கோவை அன்னூர் காவல் நிலையத்தில் இன்று ஓரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கோவை: கோவை அன்னூர் காவல் நிலையத்தில் இன்று ஓரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவை அன்னூர் காவல் நிலையத்தில் இன்று ஓரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, காவல் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் பலருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

அதன்படி, போத்தனூர், மதுக்கரை, துடியலூர், உக்கடம், சூலூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து காவல் நிலையங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அன்னூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு பிரிவு தலைமை காவலர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. உதவி ஆய்வாளரின் மனைவிக்கும் தொற்று உறுதியானது. இதனையடுத்து, காவல் நிலையம் மூடப்பட்டு காவல் நிலைய வளாகத்தில் டெண்ட் அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து, காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை எழுத்தர் ஆகிய 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே, வழக்கு தொடர்பாக கொரோனா தொற்று உள்ளவர்களுடன் பணியாற்றிய ஊர்க்காவல் படை பிரிவைச் சேர்ந்த காவலர்கள் மற்றும் காவல் துறையை சார்ந்தவர்களும் கடந்த வாரம் கோவில்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சளி மாதிரிகளை எடுத்திருந்தனர்.

இதில் அன்னூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு எஸ்.ஐ ஒருவர், 2 பெண் தலைமை காவலர்கள், 2 முதல் நிலை பெண் காவலர், 4 முதல்நிலை காவலர்கள் என 9 பேருக்கும், 1 ஊர்காவல் படையை சேர்ந்தவர் என மொத்தம் இன்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் தற்போது அன்னூர் காவல் நிலையத்தில் மூன்று பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அன்னூர் காவல் நிலையத்தில் இன்று ஒரே நாளில் 9 காவலர்கள் ஊர் காவல் படையை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது காவலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...