கோவை: ஆடி மாதத்தின் 18ம் நாள் தமிழகம் முழுவதும் ஆடிபெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. தற்போது, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள ஆறுகளில், ஆடி 18 பண்டிகையை நல்ல முறையில் கொண்டாடும்படி அமைந்துள்ளது.
கோவை: ஆடி மாதத்தின் 18ம் நாள் தமிழகம் முழுவதும் ஆடிபெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. தற்போது, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள ஆறுகளில், ஆடி 18 பண்டிகையை நல்ல முறையில் கொண்டாடும்படி அமைந்துள்ளது.
மக்கள் ஆற்று படுகைகளில் தங்கள் முன்னோர்களுக்கு அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்து வழிபாடு செய்வது பழக்கம். மேலும், உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் ஆடிபட்டம் விதைப்பதுமுண்டு.
இந்தநிலையில், இன்று தமிழகம் முழுவதும் ஆடிபெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரையிலான அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த வித தளர்வுகளுமின்றி ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்திருந்தது.
இன்று ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை. இந்த நாளில் ஆடிபெருக்கு விழா வந்திருப்பதால், கோவை பேரூர் படித்துறை பகுதியில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து வழிபடுவது, கோவில்களில் சிறப்பு பூஜை செய்வது என்று எவ்வித முறைகளும் பின்பிற்ற வாய்ப்பில்லாமல் போயுள்ளது, என மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

ஆடி 18 அன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் கோவை பேரூர் படித்துறை வெரிச்சோடி காணபட்டது. கோவில்கள் அனைத்தும் மூடபட்டிருப்பதால் சிறப்பு பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் ஆற்று படுகைகளில் தங்கள் முன்னோர்களுக்கு அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்து வழிபாடு செய்வது பழக்கம். மேலும், உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் ஆடிபட்டம் விதைப்பதுமுண்டு.
இந்தநிலையில், இன்று தமிழகம் முழுவதும் ஆடிபெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரையிலான அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த வித தளர்வுகளுமின்றி ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்திருந்தது.
இன்று ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை. இந்த நாளில் ஆடிபெருக்கு விழா வந்திருப்பதால், கோவை பேரூர் படித்துறை பகுதியில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து வழிபடுவது, கோவில்களில் சிறப்பு பூஜை செய்வது என்று எவ்வித முறைகளும் பின்பிற்ற வாய்ப்பில்லாமல் போயுள்ளது, என மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
ஆடி 18 அன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் கோவை பேரூர் படித்துறை வெரிச்சோடி காணபட்டது. கோவில்கள் அனைத்தும் மூடபட்டிருப்பதால் சிறப்பு பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.