கோவை: கோவை ராமநாதபுரம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தில் வாய்க்கால் கரையோரம் கார்ஷெட் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த கார்ஷெட் இன்று அகற்றப்பட்டது.
கோவை: கோவை ராமநாதபுரம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தில் வாய்க்கால் கரையோரம் கார்ஷெட் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த கார்ஷெட் இன்று அகற்றப்பட்டது.
நஞ்சுண்டாபுரத்தில் உள்ள வாய்க்கால் கரையோரம் 1 செண்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அங்கு கார் ஷெட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, தெற்கு தாசில்தார் அருள்முருகன், மண்டல துணை தாசில்தார் செல்வம், நில வருவாய் ஆய்வாளர் கதிரேசன், கிராம நிர்வாக அலுவலர் சித்ராதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆக்கிரமிப்பு பணிகளை தடுத்து நிறுத்தினர்.

மேலும், இந்த இடம் அரசுக்கு சொந்தமான, ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு தாசில்தார் அருள்முருகன் எச்சரித்ததையடுத்து ஆக்கிரமிப்பு பணிகளை நிறுத்தினர்.
இது குறித்து தாசில்தார் அருள்முருகன் கூறுகையில், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
நஞ்சுண்டாபுரத்தில் உள்ள வாய்க்கால் கரையோரம் 1 செண்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அங்கு கார் ஷெட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, தெற்கு தாசில்தார் அருள்முருகன், மண்டல துணை தாசில்தார் செல்வம், நில வருவாய் ஆய்வாளர் கதிரேசன், கிராம நிர்வாக அலுவலர் சித்ராதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆக்கிரமிப்பு பணிகளை தடுத்து நிறுத்தினர்.
மேலும், இந்த இடம் அரசுக்கு சொந்தமான, ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு தாசில்தார் அருள்முருகன் எச்சரித்ததையடுத்து ஆக்கிரமிப்பு பணிகளை நிறுத்தினர்.
இது குறித்து தாசில்தார் அருள்முருகன் கூறுகையில், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.