தேவாரம் பற்றி அவதூறாக பேசிய சுந்தரவல்லி மீது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சக்தி சேனா அமைப்பினர் புகார்

கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் தேவாரம் பற்றி தவறாக பேசிய சுந்தரவல்லி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று புகார் அளிக்கப்பட்டது.


கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் தேவாரம் பற்றி தவறாக பேசிய சுந்தரவல்லி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று புகார் அளிக்கப்பட்டது.

தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் என்பதால் இந்து மதத்தினரால் பெரிதும் மதிக்கப்படுவதாக உள்ளது.

இப்படியிருக்க, தேவாரம் குறித்து சுந்தரவள்ளி என்பவர் யூடியூப் சேனல் ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளதாக இந்து அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால்,வ்சுந்தரவல்லி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சக்தி சேனா என்ற இந்து மக்கள் இயக்கம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த மனுவில் கடவுள் நம்பிக்கை உள்ள இந்து மக்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் மட்டுமின்றி , உணர்ச்சிவசப்படும் இறை உணர்வாளர்களை தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்தோடும் பேசி வருவது புரிகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும், காவல்துறையினர் சுந்தரவல்லி மீது நடவடிக்கை எடுத்து சமூக அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...