ஈரோடு அருகே தண்டவாளத்தில் 4 கிலோ எடை கொண்ட கற்களை வைத்த 17 வயது சிறுவன் கைது!

ஈரோடு: ஈரோடு இருப்புப்பாதை காவல்‌ நிலைய எல்லைக்குட்பட்ட கருமாபுரம்‌ அருகே தண்டவாளத்தில் 4 கிலோ எடை கொண்ட கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற வழக்கில், 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு: ஈரோடு இருப்புப்பாதை காவல்‌ நிலைய எல்லைக்குட்பட்ட கருமாபுரம்‌ அருகே தண்டவாளத்தில் 4 கிலோ எடை கொண்ட கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற வழக்கில், 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு இருப்புப்பாதை காவல்‌ நிலைய எல்லைக்குட்பட்ட மகுடஞ்சாவடி - மாவேலிபாளையம்‌ இரயில்‌ நிலையங்களுக்கிடையே செம்மங்குளம்‌, கருமாபுரம்‌ என்ற இடத்தில்‌ சென்னையில்‌ இருந்து கோவை நோக்கி கூட்ஸ்‌ ரயில் வந்த போது, தண்டவாளத்தில் இருந்த சுமார்‌ 4 கிலோ எடை கொண்ட கல் மீது மோதி நின்றது.

இதனை தொடர்ந்து, இது சம்மந்தமாக ஈரோடு இருப்புப்பாதை காவல்‌ நிலையத்தில்‌ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இவ்வழக்கில்‌ இன்று மாலை தண்டவாளப்பாதையில்‌ கல்லை வைத்து நாச வேலையில்‌ ஈடுபட்ட சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த அருண்‌ என்ற 17 வயது சிறுவனை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து, குற்றவாளியை விரைவாக கைது செய்த ரயில்வே காவல்துறையினரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...