கோவையில் மாநகராட்சி பகுதியில் நோய் தொற்று விதிமுறைகளை மீறிய 431 கடைகள் மூடல்; 37 கடை உரிமையாளர்கள் மீது வழக்கு

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை நோய் தொற்று விதிமுறைகளை மீறிய 431 கடைகள் மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. அதில் 37 கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தகவல்.

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை நோய் தொற்று விதிமுறைகளை மீறிய 431 கடைகள் மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. அதில் 37 கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தகவல்.

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் தனிமனித இடைவெளி மீறல், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முககவசம் அணியாமல் இருத்தல் போன்றவைகளை கண்காணிக்க மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத்தின் உத்தரவின் பேரில் 20 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மாநகராட்சி அதிகாரிகளால் ஊரடங்கு காலத்தில் அரசின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி இதுவரை 431 கடைகள் மூடப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஊரடங்கு காலத்தில் அரசின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகளால் இதுவரை 431 கடைகள் மூடப்பட்டுள்ளன. அதில் 37 கடை உரிமையாளர்கள் மீது அந்தந்த காவல்நிலையங்களில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளன. வரும் நாட்களில், அரசு அறிவித்துள்ளது கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...