கோவையில் மாநகராட்சி பகுதியில் நோய் தொற்று விதிமுறைகளை மீறிய 431 கடைகள் மூடல்; 37 கடை உரிமையாளர்கள் மீது வழக்கு

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை நோய் தொற்று விதிமுறைகளை மீறிய 431 கடைகள் மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. அதில் 37 கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தகவல்.

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை நோய் தொற்று விதிமுறைகளை மீறிய 431 கடைகள் மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. அதில் 37 கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தகவல்.

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் தனிமனித இடைவெளி மீறல், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முககவசம் அணியாமல் இருத்தல் போன்றவைகளை கண்காணிக்க மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத்தின் உத்தரவின் பேரில் 20 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மாநகராட்சி அதிகாரிகளால் ஊரடங்கு காலத்தில் அரசின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி இதுவரை 431 கடைகள் மூடப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஊரடங்கு காலத்தில் அரசின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகளால் இதுவரை 431 கடைகள் மூடப்பட்டுள்ளன. அதில் 37 கடை உரிமையாளர்கள் மீது அந்தந்த காவல்நிலையங்களில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளன. வரும் நாட்களில், அரசு அறிவித்துள்ளது கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...