பல்லடம் அருகே இடத்தை ஆக்கிரமித்து மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வயதான தம்பதியினர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருப்பூர்: பல்லடம் அருகே இடத்தை ஆக்கிரமித்து மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வயதான தம்பதியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர்: பல்லடம் அருகே இடத்தை ஆக்கிரமித்து மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வயதான தம்பதியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்குட்பட்ட கரடிவாவி கிராமத்தை சேர்ந்த நாச்சிமுத்து கவுண்டர் என்பவருக்கு சொந்தமாக அப்பகுதியில் 4.75 சென்ட் நிலம் உள்ளது.

இந்நிலையில், இவரது நிலத்தின் மீது உரிமை கோரி இவரது சகோதரி கருப்பாத்தாள் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பு நாச்சிமுத்து கவுண்டருக்கு சாதகமாக வந்துள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பான மேலும் ஒரு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழ்நிலையில் கடந்த 10ம் தேதி சல்லடத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் அவரது உறவினர் ஜெயாபாலு உள்ளிட்டோர் நிலத்தில் அத்துமீறி நுழைந்து 40 வருட பழமையான மரத்தை அடியோடு பிடுங்கி விற்றுள்ளனர். இதுகுறித்து கேட்டபோது, தகாத வார்த்தைகளால் திட்டியும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.



பின்னர் இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் காவல் துறையில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாச்சிமுத்து கவுண்டர் மற்றும் அவரது மனைவியும், அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இருப்பதாக கூறி அமர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...