வெளி மாநில தொழிலாளர்கள் திரும்பி வர ஏதுவாக பஸ் மற்றும் ரயில் சேவையை அனுமதிக்க வேண்டும் - கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

கோவை: கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக வெளி மாநில தொழிலாளர்கள் திரும்பி வர ஏதுவாக பஸ் மற்றும் ரயில் சேவையை அனுமதிக்க வேண்டும் என்று கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மின்னஞ்சல் மூலமாக கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

கோவை: கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக வெளி மாநில தொழிலாளர்கள் திரும்பி வர ஏதுவாக பஸ் மற்றும் ரயில் சேவையை அனுமதிக்க வேண்டும் என்று கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மின்னஞ்சல் மூலமாக கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கைகள்: 

அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற பிற மாவட்டம் மற்றும் பிற மாநில தொழிலாளர்கள், கோவைக்கு மீண்டும் திரும்பி வர ஏதுவாக, பஸ் மற்றும் ரயில் சேவையை அனுமதிக்க வேண்டும்.

தொழிற்சாலைகளால், தனியாக பஸ் ஏற்பாடு செய்து பிற மாநில தொழிலாளர்களை அழைத்து வர முடியவில்லை.

மாநிலந்தழுவிய ஊரடங்கு அறிவிப்புகளை தவிர்த்து, நோய் தொற்று அபாயம் அதிகமாக உள்ள இடங்களுக்கு மட்டும் ஊரடங்கை அமுல்படுத்த வேண்டும்.

பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் அனுமதி தேவை என்பது தொடரப்பட்டால், தொழிற்சாலைகளுக்கு இ-பாஸ் தடையின்றி, எளிதாக வழங்கி, தொழில் சார்ந்த வேலைகள் தங்கு தடையின்றி நடைபெற உதவ வேண்டும். 

அரசு அல்லது தனியார் தொழிற்சாலையில் ஏதேனும் ஒரு நபருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால், முழு தொழிற்சாலையையும், பல நாட்களுக்கு மூடுவதை தவிர்க்க வேண்டும்.

ஊரடங்கு காலத்தில் வங்கி சேவையை நிறுத்த வேண்டாம். இதனால் சிறு, குறு தொழில்களுக்கு, மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடனுதவிகளை வங்கிகள் அளிப்பதில் தாமதம் தவிர்க்கப்படும்.

தமிழக பொருளாதார கட்டமைப்பின், முதுகெலும்பாய் விளங்கும், சிறுகுறு தொழில்கள் பொருளாதார பாதிப்பிலிருந்து, புத்துணர்வுடன் மீண்டுவர இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...