சென்னை: நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் குணசேகரன் மற்றும் நியூஸ் 18 நிறுவனத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் யூடியூபர் மாரிதாஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் குணசேகரன் மற்றும் நியூஸ் 18 நிறுவனத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் யூடியூபர் மாரிதாஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், அவர் நியூஸ்18 குறித்து பதிவிட்ட சர்ச்சைக்குரிய வீடியோக்களை உடனடியாக நீக்க இடைக்கால உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.
கடந்த ஜூலை 17 ஆம் தேதி, நியூஸ் 18 அசோசியேட் எடிட்டர் வினய் சரவாகி, மரிதாஸ் என்பவர் தன் பெயரில் போலி மின்னஞ்சல் அனுப்பியது குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
ஒரு போலி அஞ்சலை அனுப்பும் ஒரே நோக்கத்திற்காக அந்த மின்னஞ்சல் கணக்கு உருவாக்கப்பட்டது, பின்னர் நீக்கப்பட்டது என்பது மின்னஞ்சல் நிறுவனம் புரோட்டான்மெயில் உறுதி செய்தது.
வினய் சரவாகி அளித்த புகாருக்கு எதிராக ஐபிசியின் பல பிரிவுகளின் (465, 469, 471) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66 (பி) மற்றும் 41 ஆகியவற்றின் கீழ் சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.
இந்த நிலையில், மாரிதாஸ் மீது 1.5 கோடி மானநஷ்டயீடு வழக்கு, நியூஸ் 18 நிறுவனத்தினர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, நியூஸ் 18 குறித்து மாரிதாஸ் அவர் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ள அனைத்து வீடியோக்களையும் நீக்க வேண்டும் என்று உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில், அவர் நியூஸ்18 குறித்து பதிவிட்ட சர்ச்சைக்குரிய வீடியோக்களை உடனடியாக நீக்க இடைக்கால உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.
கடந்த ஜூலை 17 ஆம் தேதி, நியூஸ் 18 அசோசியேட் எடிட்டர் வினய் சரவாகி, மரிதாஸ் என்பவர் தன் பெயரில் போலி மின்னஞ்சல் அனுப்பியது குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
ஒரு போலி அஞ்சலை அனுப்பும் ஒரே நோக்கத்திற்காக அந்த மின்னஞ்சல் கணக்கு உருவாக்கப்பட்டது, பின்னர் நீக்கப்பட்டது என்பது மின்னஞ்சல் நிறுவனம் புரோட்டான்மெயில் உறுதி செய்தது.
வினய் சரவாகி அளித்த புகாருக்கு எதிராக ஐபிசியின் பல பிரிவுகளின் (465, 469, 471) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66 (பி) மற்றும் 41 ஆகியவற்றின் கீழ் சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.
இந்த நிலையில், மாரிதாஸ் மீது 1.5 கோடி மானநஷ்டயீடு வழக்கு, நியூஸ் 18 நிறுவனத்தினர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, நியூஸ் 18 குறித்து மாரிதாஸ் அவர் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ள அனைத்து வீடியோக்களையும் நீக்க வேண்டும் என்று உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.