நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழை..! விளைநிலங்களில் காய்கறிகளை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம்!

நீலகிரி: நீலகிரியில் தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் பெரும்பாலான விளைநிலங்களில், விவசாயிகள் காய்கறிகளை சாகுபடி செய்யும் பணியினை துரிதப்படுத்தியுள்ளனர்.

நீலகிரி: நீலகிரியில் தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் பெரும்பாலான விளைநிலங்களில், விவசாயிகள் காய்கறிகளை சாகுபடி செய்யும் பணியினை துரிதப்படுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் முக்கிய விவசாயமாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டை காேஸ் உள்ளிட்ட காய்கறிகள் விவசாயம் அதிக அளவு பயிரிடப்படுவது வழக்கம்.

இதனிடையே, கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்ய ஆட்கள் கிடைக்காததால் குறைந்த அளவு விவசாயிகளைக் கொண்டு மலை தோட்ட காய்கறிகளை பயிரிட்டிருந்தனர்.



இந்த நிலையில், தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், வேலைக்கு ஆட்கள் கிடைப்பதாலும் உதகையில் உள்ள கீழ் கவுஹட்டி, முத்தாேரை பாலடா, கோத்தகிரி, குன்னூர் சேலாஸ் போன்ற பகுதிகளில் மூன்று மாதத்திற்கு முன்பு பயிரிடப்பட்டிருந்த மலைத் தோட்ட காய்கறிகளை அறுவடை செய்தும், புதிய காய்கறி சாகுபடியிலும் இறங்குவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக விளை நிலங்களில் விரைவில் பசுமை திரும்பும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...