திருப்பூரில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

திருப்பூர்: திருப்பூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற பிரபு (29) என்பவரை திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலைய போலிசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

திருப்பூர்: திருப்பூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற பிரபு (29) என்பவரை திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலைய போலிசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பிரபு (29) கடந்த 6 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் திருப்பூர் புதுப்பாளையம் பகுதியில் வசித்துவருகிறார். அதே பகுதியில் வேலை செய்து வரும் பிரபு வீட்டு அருகில் உள்ள 14 வயது சிறுமியை, கடந்த 9 மாதங்களாக காதலிப்பதாக கூறி அச்சிறுமியை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. 

பின்னர், ஒரு கட்டத்தில் அச்சிறுமி வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிய வந்ததும், இரண்டு நாட்கள் முன்பு அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் பூண்டி காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், பூண்டி காவல் நிலைய போலீசார் தருமபுரி சென்று அந்த சிறுமியை மீட்டும பிரபுவை கைது செய்து, திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 



பின்னர், விசாரணை செய்த மகளிர் காவல் நிலைய போலீசார் பிரவுவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...