திருப்பூரில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

திருப்பூர்: திருப்பூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற பிரபு (29) என்பவரை திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலைய போலிசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

திருப்பூர்: திருப்பூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற பிரபு (29) என்பவரை திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலைய போலிசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பிரபு (29) கடந்த 6 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் திருப்பூர் புதுப்பாளையம் பகுதியில் வசித்துவருகிறார். அதே பகுதியில் வேலை செய்து வரும் பிரபு வீட்டு அருகில் உள்ள 14 வயது சிறுமியை, கடந்த 9 மாதங்களாக காதலிப்பதாக கூறி அச்சிறுமியை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. 

பின்னர், ஒரு கட்டத்தில் அச்சிறுமி வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிய வந்ததும், இரண்டு நாட்கள் முன்பு அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் பூண்டி காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், பூண்டி காவல் நிலைய போலீசார் தருமபுரி சென்று அந்த சிறுமியை மீட்டும பிரபுவை கைது செய்து, திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 



பின்னர், விசாரணை செய்த மகளிர் காவல் நிலைய போலீசார் பிரவுவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...