கோவை: கோவையில் குடியிருப்பு பகுதியில் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றித்திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அதே நாள் மற்றொரு நகர பகுதியிலும் அடையாளம் தெரியாத நபர்கள் ஆயுதங்களுடன் வலம்வரும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் குடியிருப்பு பகுதியில் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றித்திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அதே நாள் மற்றொரு நகர பகுதியிலும் அடையாளம் தெரியாத நபர்கள் ஆயுதங்களுடன் வலம்வரும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை இருகூர் அருகே உள்ள தீபம் நகர் பகுதியில் கடந்த 23ம் தேதி நள்ளிரவு சுமார் 7 நபர்கள் மேல் சட்டையின்றி கையில் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் உலா வந்துள்ளனர். இந்த காட்சிகள் அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதே நாள் பீளமேடு வார்டு எண் 38க்குட்பட்ட பாலகுரு கார்டன் பகுதியிலும் இதேபோல் 3 பேர் முகங்களில் துணிகள் அணிந்து, அரைகுறை ஆடையுடன் சுற்றும் வீடியோ காட்சிகள் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும், பீளமேடு பகுதியில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடைபெற்றுள்ளது. சிங்காநல்லூர் மற்றும் பீளமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த இந்த சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.