கோவை: கோவை தடாகம் காவல் எல்லையில் வீட்டின் உள்ளே புகுந்து 17 பவுன் தங்க நகை மற்றும் 55 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை தடாகம் காவல் எல்லையில் வீட்டின் உள்ளே புகுந்து 17 பவுன் தங்க நகை மற்றும் 55 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சின்னதடகம் அருகே உள்ள 24 வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் கதிரவன்(34). இவர் ஆனைகட்டி அருகே உள்ள நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், அவரும் அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் கடந்த வாரம் திங்கட்கிழமை வழக்கம் போல அவர்களது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகை 55 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து, அளித்த புகாரின் பேரில் நேற்று தடாகம் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இந்த தடாகம் பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தடாகம் பகுதி பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கோவை சின்னதடகம் அருகே உள்ள 24 வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் கதிரவன்(34). இவர் ஆனைகட்டி அருகே உள்ள நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், அவரும் அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் கடந்த வாரம் திங்கட்கிழமை வழக்கம் போல அவர்களது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகை 55 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து, அளித்த புகாரின் பேரில் நேற்று தடாகம் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இந்த தடாகம் பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தடாகம் பகுதி பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.