கோவை உக்கடம் மேம்பாலப் பணிகளை இந்தாண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டம் - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

கோவை: கோவை: கோவை உக்கடம் - ஆத்துபாலம் இடையே கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவை: கோவை உக்கடம் - ஆத்துபாலம் இடையே கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை உக்கடம்-ஆத்துபாலம் சாலை பொள்ளாச்சி செல்வதற்கும், வாளையார் வழியாக கேரளா மாநிலம் செல்வதற்கும் முக்கிய சாலையாக உள்ளது. இது தவிர குனியமுத்தூர், போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளது. இதனால் இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இதன் காரணமாக கடந்த 2018ம் ஆண்டு உக்கடம்-ஆத்துபாலம் இடையே மேம்பாலம் கட்டும் பணி ஏப்ரல் மாதம் துவங்கியது. முதற்கட்டமாக உக்கடம் முதல் கரும்புக்கடை இடையே உள்ள மேம்பாலப் பணிகளுக்கு ரூ.216 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் 55 தூண்கள் அமைக்க திட்டமிடப்பட்டு சுமார் 45 தூண்கள் வரை பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும் 15க்கும் மேற்பட்ட தூண்களில் ஓடுதளம் அமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதனிடையே, கரும்புக்கடை முதல் ஆத்துபாலம் வரை இரண்டாம் மேம்பாலப் பணிகளுக்காக தமிழக அரசு ரூ.265 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. முதல் கட்ட பணிகள் நிறைவடைந்த உடன் இரண்டாம் கட்ட பணிகள் துவக்கப்பட உள்ளன.

அதேபோல, உக்கடம்-ஆத்துபாலம் மேம்பாலத்தில் வாகன ஒட்டிகள் வசதிக்காகவும், மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் மூன்று இடங்களில் இறங்குதளங்கள் அமைக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், உக்கடம் மேம்பாலத்தின் முதல் கட்ட பணிகள் ஓரளவு முடிந்துவிட்டன. கூடிய விரைவில் இரண்டாம் கட்ட பணிகள் துவங்கப்படும். இந்தாண்டு இறுதிக்குள் உக்கடம் மேம்பாலம் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம், என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...