கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள இரண்டு தனியார் செல்போன் கடைகளில் போதிய சமூக இடைவெளியினை பின்பற்றாமல் இயங்கி வந்ததை தொடர்ந்து மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்களின் உத்தரவின்படி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் பகுதியிலுள்ள இரண்டு தனியார் செல்போன் கடைகளில் போதிய சமூக இடைவெளியினை பின்பற்றாமல் இயங்கி வந்ததை தொடர்ந்து மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக மாநகராட்சியின் 5 மண்டலத்திற்குட்பட்ட 100 வார்டுகளிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 15 டிராக்டர்கள், 10 மினி டிராக்டர்கள், 20 TATA ACE, 4 மொபைல் ஜெட், 6 வஜ்ரா வாகனங்களின் மூலமாக கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர் அவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.