கோவையில் கல்லூரி மாணவியை கொலை செய்த வாலிபரை காவல் நிலையத்தில் சந்திக்க சென்ற உறவினர் மீது இறந்த பெண்ணின் உறவினர்கள் தாக்குதல்!

கோவை: கோவையில் காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை காவல் நிலையத்தில் சந்திக்க சென்ற உறவினரை இறந்த பெண்ணின் உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கோவை: கோவையில் காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை காவல் நிலையத்தில் சந்திக்க சென்ற உறவினரை இறந்த பெண்ணின் உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை பேரூர் ஆறுமுக கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(48) பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் ஐஸ்வர்யா (18) தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இவரது வீட்டின் அருகில் வசிக்கும் ரித்தீஷ் மோட்டர் வைண்டிங் பணி செய்து வருகிறார். இவரும் ஐஸ்வர்யாவும் காதலித்து வந்த நிலையில், இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வர இருவரையும் அழைத்துப் பேசி கண்டித்துள்ளனர். இதனை தொடர்ந்து, ஐஸ்வர்யா ரத்தீஸுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 17-ம் தேதி இரவு ஐஸ்வர்யா வீட்டுக்குச் சென்ற ரிதீஸ் தன்னை காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்தியதால் ஐஸ்வர்யா வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார்.

மகளின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த சக்திவேலையும் கத்தியால் குத்திய ரதீஸ், உன்னால் தான் என் காதல் பறிபோனது என ஆத்திரத்துடன் என கூறியுள்ளார். படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஐஸ்வர்யா உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ரதீசை தேடி வந்த நிலையில், அவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு துணிகள் மற்றும் பிரட் வாங்கி வர சொல்லி காவலர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து, ரித்தீஷின் உறவினர் துணி மற்றும் பிரட் வாங்கி கொண்டு காவல் நிலையம் சென்ற போது, அங்கிருந்த உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் ரித்தீஷின் உறவினரை தாக்கி உள்ளனர். காவல் நிலையம் முன்பு இருதரப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

மேலும், ரித்தீஷை தொண்டாமுத்தூர் காவல் நிலையம் நிலையத்தில் இருந்து, பேரூர் காவல் நிலையத்திற்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...