கோவை: கோவையில் குழந்தைக்கு ஊட்டிய காம்பிளான் ஊட்டச் சத்து பவுடரில் பல்லியை கண்ட குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
கோவை: கோவை தெலுங்குபாளையம் டெக்ஸ்டூல் காலணி பகுதியில் வசித்து வரும் கார்த்திக்- சுகன்யா. தம்பதியினருக்கு, ரித்திக் விஜய் (7) சமந்தா ஸ்ரீ (2) என இரு குழந்தைகள் உள்ளனர்.
கார்த்திக் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த மாதம் செல்வபுரம் பகுதியில் உள்ள அப்போலோ மருந்தகத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க காம்பிளான் பவுடர் வாங்கி உள்ளார்.
ஏற்கனவே, சிறிதளவு பால் பவுடர் இருந்த காரணத்தால், குழந்தைகளின் தாயார் நேற்று வாங்கிய புதிய காம்ப்ளான் பாக்கெட்டை திறந்து சிறுவன் ரித்திக் விஜய்க்கு கலந்து கொடுத்து உள்ளார்.

அந்த பானத்தை உண்ட சிறுவன், சிறு நேரத்தில் சோர்வுடன் காணப்பட்டு இருந்துள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மீண்டும் இன்று அதே காம்பிளான் பாக்கெட்டை திறந்த போது அதில் ஒரு பல்லி இருந்ததாக, குழந்தைகளின் தாய் சுகன்யா தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சிறுவனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
வேறு, எந்த குழந்தையும் பாதிக்கபட்டு விட கூடாது என்பதால் இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளதாக குழந்தையின் தாய் சுகன்யா தெரிவித்தார்.
கார்த்திக் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த மாதம் செல்வபுரம் பகுதியில் உள்ள அப்போலோ மருந்தகத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க காம்பிளான் பவுடர் வாங்கி உள்ளார்.
ஏற்கனவே, சிறிதளவு பால் பவுடர் இருந்த காரணத்தால், குழந்தைகளின் தாயார் நேற்று வாங்கிய புதிய காம்ப்ளான் பாக்கெட்டை திறந்து சிறுவன் ரித்திக் விஜய்க்கு கலந்து கொடுத்து உள்ளார்.

அந்த பானத்தை உண்ட சிறுவன், சிறு நேரத்தில் சோர்வுடன் காணப்பட்டு இருந்துள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மீண்டும் இன்று அதே காம்பிளான் பாக்கெட்டை திறந்த போது அதில் ஒரு பல்லி இருந்ததாக, குழந்தைகளின் தாய் சுகன்யா தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சிறுவனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.
வேறு, எந்த குழந்தையும் பாதிக்கபட்டு விட கூடாது என்பதால் இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளதாக குழந்தையின் தாய் சுகன்யா தெரிவித்தார்.