கோவை: தொழிலாளர் வீட்டு வசதி குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வால்பாறை அமீதுவுக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கால்பந்து வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கோவை: தொழிலாளர் வீட்டு வசதி குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வால்பாறை அமீதுவுக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கால்பந்து வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ஒரு அங்கமான தொழிலாளர் வீட்டு வசதி குழுவிற்கு தமிழக அரசால் புதிய உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவின் ஒரு உறுப்பினராக வால்பாறை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவரும் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான வால்பாறை வீ.அமீது அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள அலுவலகத்தில் புதுக்காடு, ஷேக்கல்முடி, முருகாளி, சோலையார் டேம், சேடல் டேம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் வால்பாறை வீ.அமீதுவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் .
இவர் வால்பாறை பகுதிக்கு இன்னும் சிறப்பான பணிகளை செய்ய வேண்டும் என்று அனைத்து பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் நகர துணைச் செயலாளர் பொன் கணேஷ், பாசறை மாவட்ட செயலாளர் சலாவுதீன், ஜார்ஜ், சசிகுமார் , மணிகண்டன், சோலையார் டேம் பாலமுருகன், சுந்தரம், கீதா, மூக்கம்மாள், செல்வி, கட்சி தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ஒரு அங்கமான தொழிலாளர் வீட்டு வசதி குழுவிற்கு தமிழக அரசால் புதிய உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவின் ஒரு உறுப்பினராக வால்பாறை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவரும் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான வால்பாறை வீ.அமீது அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள அலுவலகத்தில் புதுக்காடு, ஷேக்கல்முடி, முருகாளி, சோலையார் டேம், சேடல் டேம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் வால்பாறை வீ.அமீதுவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் .
இவர் வால்பாறை பகுதிக்கு இன்னும் சிறப்பான பணிகளை செய்ய வேண்டும் என்று அனைத்து பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் நகர துணைச் செயலாளர் பொன் கணேஷ், பாசறை மாவட்ட செயலாளர் சலாவுதீன், ஜார்ஜ், சசிகுமார் , மணிகண்டன், சோலையார் டேம் பாலமுருகன், சுந்தரம், கீதா, மூக்கம்மாள், செல்வி, கட்சி தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.