கோவை: கோவை தொண்டாமுத்தூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் மூன்று பேருக்கு கொரோனோ தொற்று உறுதியானதையடுத்து காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் மூன்று பேருக்கு கொரோனோ தொற்று உறுதியானதையடுத்து காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோவையில் சில காவலர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி காவலர்கள் பாதிக்கப்படுவதால் காவல் நிலையங்களும் மூடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை தொண்டாமுத்தூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் மூன்று பேருக்கு கொரோனோ தொற்று உறுதியானதையடுத்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து, சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் 30 வயதான காவலருக்கு கொரோனோ தொற்று உறுதியானதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதேபோல, சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சோமனூர் ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோவையில் சில காவலர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி காவலர்கள் பாதிக்கப்படுவதால் காவல் நிலையங்களும் மூடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை தொண்டாமுத்தூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் மூன்று பேருக்கு கொரோனோ தொற்று உறுதியானதையடுத்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து, சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் 30 வயதான காவலருக்கு கொரோனோ தொற்று உறுதியானதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதேபோல, சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சோமனூர் ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.