கோவை: மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் கடந்த நாட்களாக யானைகள் இறந்து வரும் நிலையில் இன்று நெல்லித்துறை காப்புகாட்டில் அருகே உள்ள சித்தக்கொனை பழங்குடி கிராமத்தில் 8 வயதுடைய ஆண் காட்டு மாடு இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் கடந்த நாட்களாக யானைகள் இறந்து வரும் நிலையில் இன்று நெல்லித்துறை காப்புகாட்டில் அருகே உள்ள சித்தக்கொனை பழங்குடி கிராமத்தில் 8 வயதுடைய ஆண் காட்டு மாடு இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வன அதிகாரிகள் குழு ஆய்வு செய்து மாவட்ட வன அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உத்தரவின் பேரில் தேக்கம்பட்டி உதவி கால்நடை மருத்துவர் கே.ராஜேஷ்குமார் அவர்களால் ,WNCT வன அலுவலர்கள் மற்றும் சித்துக்கொனை பழங்குடி மக்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், பரிசோதனை செய்யப்பட்டதில் நுரையீரலில் நோய்த்தொற்று ஏற்பட்டு வீக்கமடைந்து உள்ளதால் உயிரிழந்து இருக்கக் கூடும் எனவும் ஆய்வக பரிசோதனைக்காக உடலுறுப்புகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆய்வறிக்கை வந்த பின்னரே முடிவுகள் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வன அதிகாரிகள் குழு ஆய்வு செய்து மாவட்ட வன அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உத்தரவின் பேரில் தேக்கம்பட்டி உதவி கால்நடை மருத்துவர் கே.ராஜேஷ்குமார் அவர்களால் ,WNCT வன அலுவலர்கள் மற்றும் சித்துக்கொனை பழங்குடி மக்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், பரிசோதனை செய்யப்பட்டதில் நுரையீரலில் நோய்த்தொற்று ஏற்பட்டு வீக்கமடைந்து உள்ளதால் உயிரிழந்து இருக்கக் கூடும் எனவும் ஆய்வக பரிசோதனைக்காக உடலுறுப்புகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆய்வறிக்கை வந்த பின்னரே முடிவுகள் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.