வேலை நிமித்தமாக கொல்கத்தாவிலிருந்து வால்பாறைக்கு வந்த பொறியாளருக்கு கொரானா தொற்று உறுதி

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு வேலை நிமித்தமாக கொல்கத்தாவிலிருந்து வந்த பொறியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு வேலை நிமித்தமாக கொல்கத்தாவிலிருந்து வந்த பொறியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வால்பாறையில் உள்ள வாட்டர் பால் (Water Fall) தேயிலை தோட்டத்தில், உள்ள தேயிலை தொழிற்சாலைக்கு இயந்திர பணிகளுக்காக நான்கு தினங்களுக்கு முன் கொல்கத்தாவிலிருந்து ஒரு பொறியாளர் வந்துள்ளார்.



அவர் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த நிலையில், தகவல் கிடைக்கப்பெற்று அங்கு வந்த சுகாதாரத்துறையினர் அவரை தனிமைப்படுத்தி அவரிடம் இருந்து சளி மாதிரியை எடுத்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.



இந்த நிலையில், பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் தனி ஆம்புலன்ஸ் மூலம் அவரை அழைத்துச் சென்று கோவை இ.எஸ்.ஐ மருத்துவமணையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

மேலும், அவருடன் தொடர்பில் இருந்த சமையல்காரர், தோட்டக்காரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து நகராட்சி கொரோனா தடுப்பு பிரிவினர் அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து. எஸ்டேட் விருந்தினர் மாளிகையை பூட்டி வைத்தனர்.

அப்பகுதிக்கு யாரும் செல்லாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...