கோவை: மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 86 அடியாக உள்ளது.
கோவை: மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 86 அடியாக உள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையானது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்டுள்ளது. தமிழக கேரள எல்லையோரம் அடர்ந்த காட்டின் நடுவே உள்ள பில்லூர் அணையானது 100 அடி கொள்ளளவு கொண்டது.
கடந்த நான்கு மாதங்களாக அணைக்கான நீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளதால் அணையின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கேரளா மற்றும் பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் பவானி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், அணையின் நீர் மட்டம் கடந்த ஒரு வாரத்தில் நான்கு அடி உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் தற்போதைய நீர்மட்டம் 86 அடியாக உள்ளது. அதேபோல, அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 3000 கன அடியாக உள்ளது. தண்ணீர் திறப்பு என்பது மின்சார உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், பவானி ஆற்றுக்கான நீர்வரத்தும் உயர்ந்து வருகிறது. இதனால் பில்லூர் அணை மற்றும் பவானி ஆற்று நீரினை ஆதாரமாக கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ள குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது என்பதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையானது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்டுள்ளது. தமிழக கேரள எல்லையோரம் அடர்ந்த காட்டின் நடுவே உள்ள பில்லூர் அணையானது 100 அடி கொள்ளளவு கொண்டது.
கடந்த நான்கு மாதங்களாக அணைக்கான நீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளதால் அணையின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கேரளா மற்றும் பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் பவானி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், அணையின் நீர் மட்டம் கடந்த ஒரு வாரத்தில் நான்கு அடி உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் தற்போதைய நீர்மட்டம் 86 அடியாக உள்ளது. அதேபோல, அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 3000 கன அடியாக உள்ளது. தண்ணீர் திறப்பு என்பது மின்சார உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், பவானி ஆற்றுக்கான நீர்வரத்தும் உயர்ந்து வருகிறது. இதனால் பில்லூர் அணை மற்றும் பவானி ஆற்று நீரினை ஆதாரமாக கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ள குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது என்பதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.