கோவை: கோவை கந்தேகவுண்டன் சாவடியில் இ-பாஸ் மூலம் பயணிகளை ஏற்றிச் சென்று மோசடியில் ஈடுபட்ட வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை கந்தேகவுண்டன் சாவடியில் இ-பாஸ் மூலம் பயணிகளை ஏற்றிச் சென்று மோசடியில் ஈடுபட்ட வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுக்கரை காவல் ஆய்வாளர் அளித்த தகவலின் பேரில் எட்டிமடை போலீசார் கோவை கந்தேகவுண்டன் சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை மாநகருக்குள் வந்த KL-07-CS 9840 பிரதர்ஸ் ஹாலிடேஸ் என்ற வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ஹாலிடேஸ் பிரதர்ஸ் என்ற டிராவல்ஸ் நிறுவனத்தினர் பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்கள் கொச்சியில் இருந்து விசாகப்பட்டினம் செல்ல தங்களை அணுகலாம் என பதிவிட்டு இருந்து உள்ளனர்.
கேரளாவில் இருந்து கோவை மார்கமாக இந்த வாகனம் செல்ல அனுமதி வாங்கப்பட்ட நிலையில், விதிமுறைகளுக்கு மாறாக பாலக்காடு, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிகப்படியான பணம் வசூல் செய்து சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றி சென்று வந்துள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து, பேருந்தை பறிமுதல் செய்த போலீசார், டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பேருந்து ஓட்டுனர் முஹம்மது ஷபத் (30) என்பவரை பிடித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுக்கரை காவல் ஆய்வாளர் அளித்த தகவலின் பேரில் எட்டிமடை போலீசார் கோவை கந்தேகவுண்டன் சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை மாநகருக்குள் வந்த KL-07-CS 9840 பிரதர்ஸ் ஹாலிடேஸ் என்ற வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ஹாலிடேஸ் பிரதர்ஸ் என்ற டிராவல்ஸ் நிறுவனத்தினர் பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்கள் கொச்சியில் இருந்து விசாகப்பட்டினம் செல்ல தங்களை அணுகலாம் என பதிவிட்டு இருந்து உள்ளனர்.
கேரளாவில் இருந்து கோவை மார்கமாக இந்த வாகனம் செல்ல அனுமதி வாங்கப்பட்ட நிலையில், விதிமுறைகளுக்கு மாறாக பாலக்காடு, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிகப்படியான பணம் வசூல் செய்து சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றி சென்று வந்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து, பேருந்தை பறிமுதல் செய்த போலீசார், டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பேருந்து ஓட்டுனர் முஹம்மது ஷபத் (30) என்பவரை பிடித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.