கோவை உக்கடம் அருகே புர்கா வியாபாரி போல் நடித்து பெண்ணை தாக்கி நகை பறிக்க முயற்சி - போலீசார் விசாரணை!

கோவை: கோவை உக்கடம் அருகே புர்கா வியாபாரி போல் நடித்து பெண்ணை தாக்கி நகை பறிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை: கோவை உக்கடம் அருகே புர்கா வியாபாரி போல் நடித்து பெண்ணை தாக்கி நகை பறிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை உக்கடம் அன்புநகர் பகுதியைச் சேர்ந்தவர் நிஜாம். இவரது மனைவி இஷானா பர்வீன். நிஜாம் காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு நிஜாம் வீட்டின் அருகே புர்கா ( இஸ்லாம் பெண்கள் அணியும் ஆடை) விற்பனை செய்ய ஒருவர் வந்துள்ளார்.

நிஜாமின் மனைவி இஷானா பர்வீனிடம் பேச்சு கொடுத்த அந்த நபர் திடீரென அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். அப்போது சுதாரித்துக்கொண்ட இஷானா தங்க நகையினை கையில் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார்.

இதையடுத்து, அந்த மர்ம நபர் இஷானாவை கடுமையாக தாக்கி உள்ளார். இதனிடையே அங்கிருந்தவர்கள் ஓடி வரவே நிஜாமின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் பின் வாசல் வழியாக தப்பியோடினார். 

இதனை தொடர்ந்து, காயமடைந்த இஷானா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...