கோவை NH சாலையில் உள்ள மாகாளியம்மன் கோவிலின் வேல் சேதமடைந்தது குறித்து மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை NH சாலையில் உள்ள மாகாளியம்மன் கோவிலின் வேல் சேதமடைந்த சம்பவத்தில் மர்ம நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை NH சாலையில் டவுன்ஹால் ஃபைவ் கார்னர் பகுதியில் அமைந்துள்ளது அருள் மிகு மாகாளியம்மன் கோயில். இந்த கோவிலின் வாசலில் உள்ள மேல் கூரை இன்று அதிகாலை மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து, தகவலறிந்து வந்த உக்கடம் போலீசார் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, NH சாலையில் பெஸ்தவர் வீதியில் மாகாளியம்மன் கோவிலின் முன்புறம் உள்ள வேல் சேதமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மர்மநபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை NH சாலையில் டவுன்ஹால் ஃபைவ் கார்னர் பகுதியில் அமைந்துள்ளது அருள் மிகு மாகாளியம்மன் கோயில். இந்த கோவிலின் வாசலில் உள்ள மேல் கூரை இன்று அதிகாலை மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து, தகவலறிந்து வந்த உக்கடம் போலீசார் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, NH சாலையில் பெஸ்தவர் வீதியில் மாகாளியம்மன் கோவிலின் முன்புறம் உள்ள வேல் சேதமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மர்மநபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.