கோவை கருப்ப கவுண்டர்‌ வீதியில்‌ உத்தரவை மீறி இரவு நேரத்தில் இயங்கி வந்த நகைப்பட்டறைக்கு சீல்..!

கோவை: கொரோனா தொற்று காரணமாக, கோவை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் தங்க நகை பட்டறை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பட்டறைகள் செயல்படடால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோவை: கொரோனா தொற்று காரணமாக, கோவை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் தங்க நகை பட்டறை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பட்டறைகள் செயல்படடால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோவை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட செல்வபுரம், தெலுங்கு பாளையம், சலீவன் வீதி, டவுன் ஹால், ராஜ வீதி போன்ற பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேலான நகை பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில், செல்வபுரம் பகுதியில் 120 இக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், பெருவாரியாக மக்கள் பட்டறை தொழிலில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் என தெரியவந்ததை அடுத்து பட்டறைகள் இயங்க தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.83 கருப்பகவுண்டர்‌ வீதியில்‌ அரசின்‌ உத்தரவினை பின்பற்றாமல்‌ இரவு நேரங்களில்‌ ரகசியமாக நகைப்பட்டறை ஒன்று.இயங்கி வருவதாக மாநகராட்சிக்கு தகவல் கிடைக்க பெற்றது.

இதையடுத்து, நோய்‌ தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ உத்தரவின்படி, மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட பறக்கும் படையினர் அந்த பட்டறைக்கு சீல் வைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...