கோவை: கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து, பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து, பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் காவிச்சாயம் ஊற்றி அவமதித்தனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் த.பெ.தி.க, தி.வி.க, தி.க, விசிக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதுபோன்ற செயல்கள் நடப்பதை தவிர்க்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதேபோல, சித்தாபுதூர் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகம் முன்பு அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.