கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்புக்கு 2018ம் ஆண்டின் சுற்றுச்சூழல் மேலாண்மை விருது!

கோவை: தமிழக அரசின் 2018ம் ஆண்டின் சுற்றுச்சூழல் மேலாண்மையின் டாக்டர் குருசாமி முதலியார் விருதினை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வென்றுள்ளது.

கோவை: தமிழக அரசின் 2018ம் ஆண்டின் சுற்றுச்சூழல் மேலாண்மையின் டாக்டர் குருசாமி முதலியார் விருதினை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வென்றுள்ளது.



தமிழக அரசு சுற்றுச்சூழல் இயக்குநகரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சுற்றுச்சூழலில் பங்காற்றியுள்ள செயல்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வருடம் தோறும் விருதும் காசோலையும் வழங்கி வருகிறது. அதனடிப்படையில், கோவையைச் சேர்ந்த கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பிற்கு கிடைத்து இருக்கிறது. கடந்த வருடம் கிடைத்திருக்க வேண்டிய விருது கொரோனா பிரச்சினையினால் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், விருது கிடைத்த மகிழ்ச்சியை நம்மிடம் பகிர்ந்து கொண்ட கோவை குளங்கள் அமைப்பினர், விருது கிடைத்திருப்பது பெரிய அங்கிகாரமாக கருதுகிறோம். அதனுடன் பொறுப்புகளும் அதிகமாக இருக்கிறது. இன்னும் ஊக்கத்துடன் செயல்பட இருக்கிறோம். இன்னும் மக்களுக்கு நல்ல விதத்தில் சேவை செய்ய வேண்டும். இங்குள்ள குளங்கள் எல்லாம் பசுமை நிறைந்தவையாக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்.



கோவை குளங்கள் அமைப்பு கொரோனா காலகட்டத்திலும் சாலையோரம் உள்ள மக்களுக்கும், பசியால் வாடிய மக்களுக்கும் அவர்களால் முடிந்த அளவுக்கு அன்றாடம் உணவு அளித்து சேவை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...