எந்த ஒரு சிலை அவமதிப்பிலும் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை - பெரியார் சிலை அவமதிப்பு விவகாரத்தில் வானதி சீனிவாசன் கருத்து!

கோவை: எந்த ஒரு சிலை அவமதிப்பிலும் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை என பெரியார் சிலை அவமதிப்பு விவகாரத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை: எந்த ஒரு சிலை அவமதிப்பிலும் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை என பெரியார் சிலை அவமதிப்பு விவகாரத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை டாடாபாத் பகுதியில் பிரதமரின் விபத்து காப்பீடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் காப்பீடு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எந்த ஒரு தனிப்பட்ட தலைவர்கள் அல்லது கட்சி அலுவலகத்தை தாக்குவது மற்றும் தனிப்பட்ட நபர்களை அவதூறு செய்வதில் பாஜகவிற்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்தார்.

அதேசமயம், ஒரு சார்பாக அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தால் மக்களுக்கு இருக்கிற சில உணர்வுகளை வெளிப்படுத்த இம்மாதிரியான சில நிகழ்வுகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு எனவும் இதையும் அரசு புரிந்து கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

மேலும், மற்ற சிறுபான்மை மத விமர்சனம் வரும் போது ஓடி பாய்ந்து நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம் இந்து மதத்தை கொச்சைப்படுத்துபவர்கள் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனவும் இந்நிலை தொடர்ந்தால் மக்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த கடினமான சூழல் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் எந்த ஒரு சிலை அவமதிப்பிலும் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை எனவும் கறுப்பர் கூட்டம் அமைப்பினர் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...