கோவை: தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், கோவை மாநகராட்சி பள்ளிகளில் 90.67 சதவீத மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், கோவை மாநகராட்சி பள்ளிகளில் 90.67 சதவீத மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் 16 பள்ளிகள் உள்ளன. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை இந்தப் பள்ளிகளில் படிக்கும் 479 மாணவர்களும், 1160 மாணவிகளும் என மொத்தம் 1639 பேர் எழுதினர்.
அதில் 395 மாணவர்களும், 1091 மாணவிகளும் என மொத்தம் 1486 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில், மாணவர்கள் 82.46 சதவீதமும், மாணவிகள் 94.5 சதவீதமும் என மொத்தம் 90.67 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குறிப்பாக, ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 102 மாணவிகளில் அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளனர்.
கோவை மாநகராட்சியில் ஒரே ஒரு பள்ளி மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் 16 பள்ளிகள் உள்ளன. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை இந்தப் பள்ளிகளில் படிக்கும் 479 மாணவர்களும், 1160 மாணவிகளும் என மொத்தம் 1639 பேர் எழுதினர்.
அதில் 395 மாணவர்களும், 1091 மாணவிகளும் என மொத்தம் 1486 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில், மாணவர்கள் 82.46 சதவீதமும், மாணவிகள் 94.5 சதவீதமும் என மொத்தம் 90.67 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குறிப்பாக, ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 102 மாணவிகளில் அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளனர்.
கோவை மாநகராட்சியில் ஒரே ஒரு பள்ளி மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.