கோவை: கோவையில் ஜாதி மோதல்களை தூண்டும் வகையில் சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கொங்கு மக்கள் முன்னனியினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை: கோவையில் ஜாதி மோதல்களை தூண்டும் வகையில் சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கொங்கு மக்கள் முன்னனியினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேளாளர் என்ற பெயரை மாற்று சமூகத்திற்கு வழங்குவதற்கு ஆதரவு தெரிவித்த தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆகியோரை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அந்த சுவரொட்டிகளின் மீது சில பகுதிகளில் எதிர் பதிவும் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கொங்கு மக்கள் முன்னணி அமைப்பினர் இது போன்ற சுவரொட்டிகள் ஜாதி மோதல்களை உருவாக்கும் விதத்தில் உள்ளதால், அதை ஒட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மேலும், இது போன்று செயல்கள் தமிழகத்தின் பொது அமைதியும், சட்ட ஒழுங்கும் பாதிக்கும்ப்படி உள்ளதால், இச்செயல்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேளாளர் என்ற பெயரை மாற்று சமூகத்திற்கு வழங்குவதற்கு ஆதரவு தெரிவித்த தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆகியோரை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அந்த சுவரொட்டிகளின் மீது சில பகுதிகளில் எதிர் பதிவும் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கொங்கு மக்கள் முன்னணி அமைப்பினர் இது போன்ற சுவரொட்டிகள் ஜாதி மோதல்களை உருவாக்கும் விதத்தில் உள்ளதால், அதை ஒட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மேலும், இது போன்று செயல்கள் தமிழகத்தின் பொது அமைதியும், சட்ட ஒழுங்கும் பாதிக்கும்ப்படி உள்ளதால், இச்செயல்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.