கோவை: சாலை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறையில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: சாலை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறையில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா தொற்று காரணமாக கடந்த நான்கு மாதங்களாக பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படாததால், சுற்றுலா வாகன தொழிலை நம்பியுள்ள நூற்றுக்கு மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.

இந்நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, காப்பீட்டு தொகை உயர்வு, சாலை வரி உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்தியும் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் வால்பாறையில் உள்ள பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலக கிளை முன் வால்பாறை சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் சந்தோஷ் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.சுரேஷ் ஆகியோர் தலைமையில் பொருளாளர் ரவி முருகன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்
கோவை மாவட்டம் வால்பாறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா தொற்று காரணமாக கடந்த நான்கு மாதங்களாக பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படாததால், சுற்றுலா வாகன தொழிலை நம்பியுள்ள நூற்றுக்கு மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.
இந்நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, காப்பீட்டு தொகை உயர்வு, சாலை வரி உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்தியும் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் வால்பாறையில் உள்ள பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலக கிளை முன் வால்பாறை சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் சந்தோஷ் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.சுரேஷ் ஆகியோர் தலைமையில் பொருளாளர் ரவி முருகன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்