கொரொனா தொற்று: மதுக்கரை சிறப்பு உதவி ஆய்வாளர் வசித்து வந்த தொண்டாமுத்தூர் காவலர் குடியிருப்பு பகுதி தனிமைப் படுத்தப்பட்டுள்ளது

கோவை: கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றக்கூடிய இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட எட்டு காவலர்களுக்கு கொரொனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.

கோவை: கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றக்கூடிய இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட எட்டு காவலர்களுக்கு கொரொனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மதுக்கரை காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், தொற்று பாதிக்கபட்ட அனைத்து காவலர்களும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மதுக்கரை காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்தோடு தொண்டாமுத்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் வசித்த குடியிருப்பில் சுகாதரத்துறையினர் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். மேலும், அங்குள்ள ஆறு வீடுகள் அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மற்ற காவலர் குடும்பங்களுக்கும் கொரொனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட உள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...