கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற வந்த 70 வயது மூதாட்டி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற வந்த 70 வயது மூதாட்டி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை, கோவை மாவட்டத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர்.
இப்படியிருக்க கடந்த 11ஆம் தேதி கோவை கரும்புக்கடை சாரமேடு பிலால் நகர் பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவருக்கு கொரோனா அறிகுறிகளுடன் எல்கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.
இந்த நிலையில், திடீரென அவர் உடல்நிலை மோசமானதையடுத்து மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்தும் பலனின்றி பரிதாபமாக இன்று பலியானார். இதைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தின் பலி எண்ணிக்கை தற்போது 20 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் இணைந்து மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய முன்வந்து கோவையில் உள்ள மயானத்தில் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை, கோவை மாவட்டத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர்.
இப்படியிருக்க கடந்த 11ஆம் தேதி கோவை கரும்புக்கடை சாரமேடு பிலால் நகர் பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவருக்கு கொரோனா அறிகுறிகளுடன் எல்கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.
இந்த நிலையில், திடீரென அவர் உடல்நிலை மோசமானதையடுத்து மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்தும் பலனின்றி பரிதாபமாக இன்று பலியானார். இதைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தின் பலி எண்ணிக்கை தற்போது 20 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் இணைந்து மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய முன்வந்து கோவையில் உள்ள மயானத்தில் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.