கோவை செல்வபுரம் அருகே ஏற்கனவே கடன் பெற்ற வாகனங்களுக்கு பிட்டிங் முறையில் கடன் வழங்கிய நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

கோவை: கோவை செல்வபுரம் அருகே ஏற்கனவே கடன் பெற்ற வாகனங்களுக்கு பிட்டிங் முறையில் கடன் வழங்கிய நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை: கோவை செல்வபுரம் அருகே ஏற்கனவே கடன் பெற்ற வாகனங்களுக்கு பிட்டிங் முறையில் கடன் வழங்கிய நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த அபுதாஹீர் என்பவர் அபு. கன்சல்டிங் என்ற பெயரில் பழைய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறார். இவர் மீது கடந்த 22ம் தேதி பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, அவரது குடோன் மற்றும் அலுவலகத்தில் காவல்துறையினர் சோதனை செய்த போது நூற்றுக்கும் மேற்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் அவரது குடோனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 19 இருசக்கர வாகனங்கள் 10 கார்கள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பிட்டிங் என்ற பெயரில் வாகனத்தின் உரிமையாளர்கள் கடன் பெற்று சரிவர திருப்பி செலுத்தாத வாகனங்களுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்து தனியார் நிதி நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், அவர் பிட்டிங் வாகனங்களை பல்வேறு நபர்களுக்கு விற்று உள்ளதும் தெரியவந்தது. இந்த நிலையில், மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் அபுதாஹீர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...