பொள்ளாச்சியில் இரு வேறு சம்பவங்களில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் போக்சோ சட்டத்தில் கைது

கோவை: பொள்ளாச்சியில் 8ம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்த பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர், மகளுடன் விளையாட வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அப்பா என இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கோவை: பொள்ளாச்சியில் 8ம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்த பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர், மகளுடன் விளையாட வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அப்பா என இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சியை அடுத்த போடிபாளையம் பகுதியில் பாபு என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 8ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.

இந்த நிலையில், ஆள் நடமாட்டம் இல்லாத விநாயகர் கோயிலில் ரகசிய தாலி கட்டி பெண்ணை பெண்ணின் வீட்டிற்கு அனுப்பி விட்டு அவ்வப்போது யாரும் இல்லாத நேரத்த்தில் பெண்ணை தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்து கர்ப்பமாக்கியுள்ளார்.

சமீபத்தில், மாணவியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அவர் தாயார், மகளிடம் விசாரித்த போது பாபு என்ற இளைஞர் தன்னை கட்டாயபடுத்தி ரகசிய திருமணம் செய்ததாகவும், யாரும் இல்லாத நேரத்தில் தன்னை பாலியல் இச்சைக்கு ஆளாக்கியதால் தான் தற்போது கர்ப்பமடைந்தள்ளதாக கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த தாயார், பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை விசாரித்த போலீசார், அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இதேபோல், பொள்ளாச்சியை அடுத்த சின்னவதம் பச்சேரியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி பக்கத்து வீட்டில் வசிக்கும் குழந்தைகளுடன் விளையாட சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த குழந்தையின் தந்தை ராஜா பக்கத்து வீட்டு மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதை தன்னுடைய அம்மாவிடம் மாணவி கூறியதை அடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ராஜா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...