கோவை: இந்திய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரயில் நிலைய வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: இந்திய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரயில் நிலைய வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு இந்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு முழுவதும் கண்டன இயக்கத்தை நடத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மத்திய குழு அறைகூவல் விடுத்து இருந்தது.

இதன் ஒரு பகுதியாக, இன்று கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கோவை மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் 20கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.