திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், சாலையில் இன்று நாத்து நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், சாலையில் இன்று நாத்து நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தரமற்ற சாலைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது எனவும், குறிப்பாக வீரபாண்டி பகுதி, திருப்பூர்_தாராபுரம் சாலை மற்றும் திருப்பூர்-பல்லடம் சாலையை இணைக்கும் முக்கிய சாலைகள் மிகுந்த மோசமான நிலையில் இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இந்த சாலையில் பல்வேறு இடங்களில் குழியாக இருப்பதோடு சாலைகள் பெயர்ந்து ஜல்லிக்கற்கள் வெளியே தெரியும்படி உள்ளது. மேலும் மழைக்காலங்களில் குண்டும் குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி விடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர், என குற்றம் சாட்டினர்.
எனவே, குண்டும் குழியுமான சாலையை உடனடியாக சரி செய்து தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல உயிர்களை காவு வாங்கும் மோசமான சாலையை உடனடியாக சரி செய்து தரக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தரமற்ற சாலைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது எனவும், குறிப்பாக வீரபாண்டி பகுதி, திருப்பூர்_தாராபுரம் சாலை மற்றும் திருப்பூர்-பல்லடம் சாலையை இணைக்கும் முக்கிய சாலைகள் மிகுந்த மோசமான நிலையில் இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இந்த சாலையில் பல்வேறு இடங்களில் குழியாக இருப்பதோடு சாலைகள் பெயர்ந்து ஜல்லிக்கற்கள் வெளியே தெரியும்படி உள்ளது. மேலும் மழைக்காலங்களில் குண்டும் குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி விடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர், என குற்றம் சாட்டினர்.
எனவே, குண்டும் குழியுமான சாலையை உடனடியாக சரி செய்து தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல உயிர்களை காவு வாங்கும் மோசமான சாலையை உடனடியாக சரி செய்து தரக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.