நீலகிரி: நீலகிரியில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், இன்றைய பாதிப்பு 38 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
நீலகிரி: நீலகிரியில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், இன்றைய பாதிப்பு 38 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மாவட்டத்தின் பாதிப்பின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. இன்று தங்காடு, ஓரநள்ளி கிராமத்தில் 48 வயதான ஆண், 11 வயதான பெண், அதே போன்று நியூ அட்டுபாயில் எமரால்டு பகுதியிலிருந்து வந்திருந்த 75 வயதான முதியவர், 30 வயதான பெண் என பல்வேறு பகுதிகளிலிருந்து, என இன்று 38 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
எனவே, இந்த பகுதிகளில் எல்லாம் கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், அத்தியாவசியமின்றி யாரும் வெளியே வரக்கூடாது எனவும், அவ்வாறு வரும் பட்சத்தில் கண்டிப்பாக முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியினை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தின் பாதிப்பின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. இன்று தங்காடு, ஓரநள்ளி கிராமத்தில் 48 வயதான ஆண், 11 வயதான பெண், அதே போன்று நியூ அட்டுபாயில் எமரால்டு பகுதியிலிருந்து வந்திருந்த 75 வயதான முதியவர், 30 வயதான பெண் என பல்வேறு பகுதிகளிலிருந்து, என இன்று 38 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
எனவே, இந்த பகுதிகளில் எல்லாம் கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், அத்தியாவசியமின்றி யாரும் வெளியே வரக்கூடாது எனவும், அவ்வாறு வரும் பட்சத்தில் கண்டிப்பாக முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியினை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.