கோவை: முகநூலில் இழிவாகவும் பொய்யான செய்திகளை பரப்பி வரும் அதிமுக நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நா.கார்த்திக் எம்எல்ஏ இன்று, மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.
கோவை: முகநூலில் இழிவாகவும் பொய்யான செய்திகளை பரப்பி வரும் அதிமுக நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நா.கார்த்திக் எம்எல்ஏ இன்று, மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.
அதிமுக நபர் ஒருவர் தனது அவர் முகநூல் பக்கத்தில் திமுக மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் மற்றும் திமுகவினரை தவறாக சித்தரித்து பதிவு வெளியிட்டதாக, மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுகவினர் வேண்டும் என்றே இதுபோன்ற அநாகரீக செயலில் ஈடுபட்டு வருவதாகவும், இதுபோன்று செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையாளர், சுமித் சரண் அவரிடம் மனு அளித்தார்.
இதைத்தொடர்ந்து எம்எல்ஏ நா.கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசுகையில்:
கோவையில் அதிமுக அரசு சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளின் ஊழல்கள், முறைகேடுகள், தொடர்பாக திமுக சார்பில் அறிக்கையாகவும், செய்தியாகவும் வெளியிட்டு வருவதாகவும், அதற்கு பதில் கூற முடியாமல் திமுக நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கில் வேண்டும் என்றே பொய் வழக்குகளை அதிமுகவின் தூண்டுதலின் பேரில் வழக்கு போட்டு திமுகவினரை அச்சுறுத்துவதற்காக சிறையில் அடைக்கின்றனர்.
அதிமுக நபர் ஒருவர் தன்னையும் திமுக நிர்வாகிகளையும் கீழ்தரமாக பதிவு வெளியிட்டுள்ளதாகவும், அநாகரீகமாக முகநூலில் வெளியிட்டுள்ள இந்த அதிமுக நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர காவல்துறை ஆணையாளரிடத்தில் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
அதிமுக நபர் ஒருவர் தனது அவர் முகநூல் பக்கத்தில் திமுக மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் மற்றும் திமுகவினரை தவறாக சித்தரித்து பதிவு வெளியிட்டதாக, மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவினர் வேண்டும் என்றே இதுபோன்ற அநாகரீக செயலில் ஈடுபட்டு வருவதாகவும், இதுபோன்று செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையாளர், சுமித் சரண் அவரிடம் மனு அளித்தார்.
இதைத்தொடர்ந்து எம்எல்ஏ நா.கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசுகையில்:
கோவையில் அதிமுக அரசு சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளின் ஊழல்கள், முறைகேடுகள், தொடர்பாக திமுக சார்பில் அறிக்கையாகவும், செய்தியாகவும் வெளியிட்டு வருவதாகவும், அதற்கு பதில் கூற முடியாமல் திமுக நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கில் வேண்டும் என்றே பொய் வழக்குகளை அதிமுகவின் தூண்டுதலின் பேரில் வழக்கு போட்டு திமுகவினரை அச்சுறுத்துவதற்காக சிறையில் அடைக்கின்றனர்.
அதிமுக நபர் ஒருவர் தன்னையும் திமுக நிர்வாகிகளையும் கீழ்தரமாக பதிவு வெளியிட்டுள்ளதாகவும், அநாகரீகமாக முகநூலில் வெளியிட்டுள்ள இந்த அதிமுக நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர காவல்துறை ஆணையாளரிடத்தில் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.