கோவை பீளமேடு அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

கோவை: கோவை பீளமேடு அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை: கோவை பீளமேடு அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை பீளமேடு லால்பகதூர் காலனி பகுதியில் உள்ளது செல்வ விநாயகர் கோவில். இந்த கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று இரவு கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த அலாரம் ஒலித்ததை தொடர்ந்து கோவில் அருகே வசித்து வரும் பூசாரி மணிகண்டன் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு உண்டியலிலிருந்த பணம் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் பதிவாகி இருந்த கைரேகளை பதிவு செய்தனர்.

மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகிய வீடியோ காட்சிகள் மூலம் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். உண்டியல் உடைக்கப்பட்டு பணம் சிதறிக் கிடந்ததால் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டால் மட்டுமே திருடு போன பணம் எவ்வளவு என்பது தெரியவரும்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...